Thursday, June 22, 2017

குழந்தைகளற்ற வெறுமையில் தட்டான்கள்


துரத்திப் பிடிக்கவும்
வால் பிடித்து சீண்டவும்
சிறகுகளைப் பிடித்து
உள்ளங்கையில்
சிறைப்படுத்தவும்
குழந்தைகளற்ற
வெறுமையில்
பறந்து கொண்டிருக்கின்றன
மழை காலத்துத்
தட்டான்கள்!

2 comments:

  1. ஸூப்பர் இரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. முதல் வருகை, முதல் கருத்து எல்லாம் இனிமை நன்றி

      Delete